தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மலைப்பகுதியில் பெய்த மழையால் நீர்வரத்து அதிகரிப்பு குற்றாலம் மெயினருவி, ஐந்தருவிகளில் 2ம் நாளாக பொதுமக்கள் குளிக்க தடை

நெல்லை : மலைப்பகுதிகளில் பெய்த மழையால் பெருக்கெடுத்த தண்ணீர் குற்றாலம் மெயினரு, ஐந்தருவிகளில் ஆர்ப்பரித்துக் கொட்டியது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க விதிக்கப்பட்ட தடை 2வது நாளாக நேற்றும் நீடித்தது. தென்காசி மாவட்டத்தில் சீசன் காலத்தில் இயற்கை எழில் கொஞ்சி விளையாடும் குற்றாலத்தில் கடந்த இரு வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.‌

Advertisement

கடந்த வாரம் பத்து தினங்கள் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்ட நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மட்டும் தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட அனைத்துத்தரப்பினரும் அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

இவ்வாறு ஞாயிறு, திங்கள் ஆகிய இரு தினங்கள் மட்டும் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். இந்நிலையில் மீண்டும் பெய்த மழையின் காரணமாக நேற்று முன்தினம் காலை முதல் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.

இதனால் பாதுகாப்பு கருதி மெயின் அருவி ஐந்தருவி ஆகியவற்றில் மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. ஏற்கனவே பழைய குற்றாலத்தில் பராமரிப்பு பணிகள் துவங்காத காரணத்தால் 13 தினங்களாக தடை நீடிக்கிறது.

தற்போது தண்ணீர் வரத்து அதிகரிப்பு காரணமாக மெயின் அருவி ஐந்தருவி பழைய குற்றால அருவி ஆகிய 3 அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. புலி அருவி மற்றும் சிற்றருவி ஆகியவற்றில் மட்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.‌ நேற்று பகலிலும் அவ்வப்போது மழை பெய்தது. பெரும்பாலான நேரம் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

Advertisement