தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் பாறை, மண் குவியலை அகற்ற வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்

குன்னூர் : குன்னூர் மலைப்பாதையில் சாலையோரத்தில் விபத்து அபாயமுள்ள பாறை, கற்களை அகற்ற வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது.

Advertisement

இதில் கழிவுநீர் கால்வாய், பாதாள சாக்கடை, தடுப்பு சுவர் சீரமைப்பு உட்பட பல்வேறு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக மண்சரிவு ஏற்படும் இடங்களை கண்டறிந்து, அபாயகரமான இடங்களில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகளை தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே புதிதாக தடுப்பு சுவர் அமைக்கப்படும் இடங்களில் ஆபத்தான முறையில் உள்ள பாறைகள் அகற்றப்பட்டு, சாலையை விரிவாக்கம் செய்து தடுப்பு சுவர் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இதில் ஆபத்தான முறையில் மலைப்பாதையில் தொங்கிய பாறைகள் அகற்றப்பட்டு சாலையோரங்களில் வைக்கப்பட்டுள்ளன.

புதிய தடுப்பு சுவர் கட்டுவதற்காக பொக்லைன் இயந்திரம் மூலம் தோண்டப்பட்ட மண் குவியல்கள் விரிவாக்கம் செய்யப்பட்ட இடத்தில் கொட்டப்பட்டுள்ளன. இதனால் அவ்வப்போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், எனவே சாலையோரங்களில் வைக்கப்பட்டுள்ள பாறை கற்களையும், மண் குவியல்களையும் உடனடியாக அகற்ற வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Related News