தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

வரலட்சுமி விரதத்தையொட்டி திருச்சானூரில் பத்மாவதி தாயார் தங்க தேரில் பவனி

திருமலை: திருச்சானூர் கோயிலில் வரலட்சுமி விரதத்தையொட்டி பத்மாவதி தாயார் தங்க தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருப்பதி அடுத்த திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் வரலட்சுமி விரதம் நேற்று வெகு விமரிசையாக நடந்தது. சுப்ரபாதம் மற்றும் சஹஸ்ர நாமச்சரனையுடன் பத்மாவதி தாயார் மூலவர் மற்றும் உற்சவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மூலவருக்கு தங்க சேலை அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. இதைதொடர்ந்து உற்சவர் பத்மாவதி தாயார் ஆஸ்தான மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.

அங்கு ரோஜா, சாமந்தி, மல்லிகை, சம்பங்கி, துளசி, பன்னீர் இலை, மருவம், தாமரை மலர்களால் தாயாருக்கு அபிஷேகம் நடந்தது. இதனை தொடர்ந்து மாலை பத்மாவதி தாயார் தங்க தேரில் எழுந்தருளி 4 மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மாட வீதியில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து தாயாரை வழிபட்டனர். வரலட்சுமி விரத பூஜையில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்த பக்தர்களுக்கு வளையல், மஞ்சள் கயிறு, மஞ்சள், குங்குமம் மற்றும் லட்சுமி அஷ்டோத்திரம் நாமாவளி புத்தகம் ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டது.

Related News