தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காதல் கணவர் இறந்ததால் வேதனை: விஷம் கொடுத்து பெண் குழந்தையை கொன்று தாய் தற்கொலைக்கு முயற்சி

வெள்ளகோவில்: வெள்ளகோவில் அருகே காதல் கணவர் இறந்ததால் தன் ஒரு வயது பெண் குழந்தைக்கு விஷம் கொடுத்து தாயும் குடித்தார். இதில் குழந்தை இறந்தது. தாய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அடுத்த முத்தூர், மங்களப்பட்டி, காங்கேயம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (47). காங்கயம் அரசு போக்குவரத்து கிளையில் பஸ் டிரைவர். இவரது மகள் லாவண்யா (25). கடந்த 2 வருடத்திற்கு முன்பு உறவினர் கவுதம் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்து ஓராண்டாகிறது. இந்நிலையில் கடந்த 8 மாதத்திற்கு முன்பு மாரடைப்பால் கவுதம் இறந்தார். இதனால் லாவண்யா மிகவும் மன உளைச்சலில் இருந்து வந்தார். கடந்த சில நாட்களாக இரவில் உறங்குவதற்கு சிரமப்பட்டு தூக்க மாத்திரை எடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

Advertisement

இந்நிலையில் நேற்று லாவண்யா வீட்டின் கதவு வெகு நேரமாக திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகத்தின் பேரில் அக்கம் பக்கத்தினர் கதவை தட்டியும் திறக்கவில்ைல. இதனால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, வாயில் நுரையுடன் லாவண்யா மற்றும் குழந்தை மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே இருவரையும் மீட்டு ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்துவிட்டு குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்‌‌. லாவண்யா தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement