தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தாய், கள்ளக்காதலனுக்கு 180 ஆண்டு சிறை தண்டனை: கேரளா போக்சோ நீதிமன்றம் அதிரடி

மஞ்சேரி: பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், தாய்க்கும் அவரது காதலனுக்கும் தலா 180 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கேரள நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. கேரள மாநிலம் மஞ்சேரி பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி, தனது தாய் மற்றும் அவரது ஆண் நண்பரால் தொடர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். பெற்ற தாயே தனது காதலனுடன் சேர்ந்து இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிறுமியின் நடவடிக்கைகளில் ஏற்பட்ட மாற்றத்தைக் கண்ட அக்கம்பக்கத்தினர் எழுப்பிய சந்தேகத்தின் பேரில், குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் இந்த விவகாரத்தில் தலையிட்டு விசாரணை நடத்தினர்.

Advertisement

விசாரணையில், தாய் மற்றும் அவரது காதலன் இருவரும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது உறுதி செய்யப்பட்டது. மேலும், சிறுமியை மிரட்டி உண்மையை வெளியே சொல்ல விடாமல் தடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து, தாய் மற்றும் அவரது காதலன் மீது போக்சோ சட்டம் மற்றும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, மஞ்சேரி சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று (நவ. 4) தீர்ப்பளித்த நீதிபதி ஏ.எம். அஷ்ரப், குற்றம்சாட்டப்பட்ட தாய் மற்றும் அவரது காதலன் ஆகிய இருவருக்கும் தலா 180 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டார்.

பல்வேறு பிரிவுகளின் கீழ் இந்த தண்டனை வழங்கப்பட்டாலும், இவற்றை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிறைத் தண்டனையுடன், இருவருக்கும் கணிசமான அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த அபராதத் தொகையை, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. பெற்ற தாயே தனது மகளுக்கு எதிராக இழைத்த இந்த கொடூர குற்றத்தில் உடந்தையாக இருந்ததால், வழங்கப்பட்டுள்ள இந்த கடுமையான தண்டனை நாடு முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

Advertisement

Related News