நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21ல் தொடங்கி ஆக.12 வரை நடைபெறும்: அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவிப்பு
சிந்துநதி ஒப்பந்தம் நிறுத்தி வைத்துள்ளதாக ஒன்றிய அரசு அறிவித்தது தொடர்பாகவும் விவாதிக்க வாய்ப்பு உள்ளது. பாகிஸ்தான் சிம்லா ஒப்பந்தம் தொடர்பாகவும் மழைக்கால கூட்டத்தொடரில் விவாதிக்கப்பட உள்ளது. ஜாதிவாரி கணக்கெடுப்பு எப்படி நடத்தப்படும் எனவும் விவாதிக்க எதிர்க்கட்சிகள் கோரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கும் தீர்மானம் கொண்டு வர ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.