தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பண மோசடி செய்த பெண் தலைமறைவு: இருளர் பெண்கள் டிஎஸ்பி அலுவலகத்தில் புகார்

திருத்தணி: திருவாலங்காடு ஒன்றியம், தாழவேடு இருளர் காலனியை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட பெண்கள் திருத்தணி டிஎஸ்பி கந்தனை அவரது அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினர். அம் மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: மைக்ரோ பைனான்ஸ் என்ற நிதி நிறுவனம் மூலம் எங்கள் கிராம மக்கள் கடன் பெற்று தவணை முறையில் பணம் செலுத்தி வருகிறோம். கிராமத்தைச் சேர்ந்த கீதா என்பவர் நிதி நிறுவனத்தில் 9 பெண்கள் பெற்ற கடனை வாங்கிக்கொண்டார். மேலும், மாதா மாதம் தவணை தொகையை நிதி நிறுவனத்தில் செலுத்தி கொள்வதாக கூறிவிட்டு பணத்தை வாங்கிக்கொண்டு கீதா ஊரைவிட்டு தலைமறைகிவிட்டார். 3 மாதங்களாகியும் வீடு வந்து சேரவில்லை. தவணை தொகையையும் செலுத்தவில்லை. பணம் கொடுத்த நிதி நிறுவன பணியாளர்கள் வாங்கிய கடனை கட்ட சொல்லி எங்களை துன்புறுத்தி வருகிறார்கள். இரவு மற்றும் விடியற்காலை நேரங்களில் வந்து தகாத வார்த்தைகளால் பேசுவதால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். எங்களை ஏமாற்றி எங்கள் பணத்தை வாங்கி தலைமறைவாகியுள்ள கீதாவை கண்டுபிடித்து, பணத்தை மீட்டு நிதி நிறுவனத்தில் ஒப்படைக்கவும். அதுவரை நிதி நிறுவன ஊழியர்கள் எங்களை தொந்தரவு செய்யாமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
Advertisement

Advertisement