தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பணம் வைத்து கேம் விளையாட முடியாது ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் மசோதாவுக்கு ஒப்புதல்

புதுடெல்லி: ஆன்லைன் சூதாட்ட செயலிகளுக்கு தடை விதிக்கும் மசோதாவுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆன்லைன் சூதாட்ட செயலிகளில் பணம் வைத்து விளையாடும் நபர்கள் குறுகிய காலத்திலேயே அந்த விளையாட்டிற்கு அடிமையாகி, பணத்தை இழப்பதோடு தற்கொலையும் செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. இதுபோன்ற பணம் சம்பாதிக்கும் ஆன்லைன் விளையாட்டுகளில் பலரும் மன ரீதியாக பாதிக்கப்படுகின்றனர். பல குடும்பங்கள் கடனில் தள்ளப்படுகின்றன.

Advertisement

மேலும், இந்த செயலிகள் மூலம் சட்டவிரோத பண பரிவர்த்தனை, நிதி முறைகேடுகள் நடப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. 1,500க்கும் மேற்பட்ட அனுமதி பெறாத ஆன்லைன் கேமிங் செயலிகளுக்கு ஒன்றிய அரசு தடை விதித்த போதிலும் பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றன. இதனால், பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் கேம்களை ஒழுங்குபடுத்தும் வகையில் ஆன்லைன் கேமிங் ஊக்குவித்தல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் மசோதாவை கொண்டு வர ஒன்றிய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த மசோதா நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படும் என கூறப்படுகிறது. இந்த மசோதாவில் பணம் வைத்து ஆன்லைன் கேம் விளையாடும் தளங்களுக்கு வங்கிகள், நிதி நிறுவனங்கள் பண பரிமாற்றம் செய்வதை முற்றிலும் தடை செய்கிறது. மேலும் இதுபோன்ற விளையாட்டுகளை விளம்பரப்படுத்தவும் முழுமையான தடை விதிக்கப்படும். அனுமதியின்றி செயல்படும் ஆன்லைன் கேமிங் தளங்களை தடை செய்வதோடு கடுமையான தண்டனைகளும் வழங்கப்படும்.

இதன் மூலம் ஆன்லைன் கேமிங் மூலம் சூதாட்டம் முற்றிலும் தடுக்கப்படும். இதுதவிர, ராஜஸ்தானின் கோட்டா-பண்டியில் ரூ.1,507 கோடியில் புதிய பசுமை விமான நிலையத்தை அமைக்கவும், ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் 110 கிமீ தூரத்திற்கு முக்கிய துறைமுகங்கள், நகரங்களை இணைக்கும் வகையில், ரூ.8,307.74 கோடியில் 6 வழி பைபாஸ் சாலை திட்டத்திற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Advertisement

Related News