தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பணம், கருத்துரிமையை பறித்தார்கள் இப்போது ஓட்டுரிமையை பறிக்க பா.ஜ. முயற்சி செய்து வருகிறது: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்திபவனில் சுதந்திர தினத்தை முன்னிட்டு மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார். நிகழ்ச்சியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமி, எம்பி விஜய் வசந்த், முன்னாள் எம்பிக்கள் ஜே.எம்.ஆரூண், ராம சுப்பு, துணை தலைவர் சொர்ணா சேதுராமன், அமைப்புச் செயலாளர் ராம் மோகன், அணி தலைவர்கள் சூரிய பிரகாஷ்,

அசினா சையத், மாநில பொதுச் செயலாளர் டி.செல்வம், தளபதி பாஸ்கர், பி.வி.தமிழ்செல்வன், இலக்கிய அணி தலைவர் பி.எஸ்.புத்தன், சுமதி அன்பரசு, ஆர்.டி.ஐ.பிரிவு மாநில துணை தலைவர் மயிலை தரணி, எஸ்.சி.துறை துணை தலைவர் மா.வே.மலையராஜா உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர். தொடர்ந்து, செல்வப் பெருந்தகை அளித்த பேட்டி:

எழுத்தறிவு, பேச்சுரிமை உள்ளிட்ட உரிமைகள் எல்லாம் கடந்த 11 ஆண்டுகளாக பறிக்கப்பட்டு வருகிறது. பணத்தை பறித்தார்கள், கருத்துரிமையை பறித்தார்கள். இப்பொழுது ஓட்டுரிமையை பறிக்க முயற்சி செய்து வருகிறார்கள். அதைத்தான் ராகுல் காந்தி மக்கள் குரலாக ஆதாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். தூய்மைப்பணியாளர்களுக்கு அமைச்சரவை கூட்டத்தில் 7 பொன்னான திட்டங்களை அறிவித்துள்ளார்கள். அதை வரவேற்கிறோம். ஊதிய உயர்வை உறுதி செய்ய வேண்டும். நாளைக்கே கூட பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்.

ஒன்றிய பாஜ அரசு எல்லாவற்றையும் கொள்ளையடித்து விட்டது. கொள்ளையடிக்க ஒன்றும் இல்லை. உயிருக்கு போராடி ஐசியூ சென்றால், அங்கும் ஜிஎஸ்டி கட்ட வேண்டும். இனி மக்களிடம் சக்தி இல்லை. கடைசியாக இருந்த வாக்குரிமையையும் திருடி விட்டார்கள். தீவிரவாதம் தீவிரவாதம் தான். அது எந்த முகத்தில் வந்தாலும் எதிர்க்கும் ஒரே பேரியக்கம் காங்கிரஸ். தீவிரவாதத்தால் எங்கள் தலைவர்களை இழந்துள்ளோம். காந்தியை கொன்றது எந்த தீவிரவாதி என்று சொல்ல சொல்லுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Related News