தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பணம் கொடுத்தால் தான் தவெகவில் பொறுப்பு : மகளிர் அணியினர் போர்க்கொடி

சீர்காழி: மயிலாடுதுறை மாவட்ட தவெக மகளிர் அணி அமைப்பாளர் மற்றும் 10 இளம் அமைப்பாளர்களை நியமித்து அக்கட்சியின் தலைமை ஒரு அறிவிப்பை வௌியிட்டுள்ளது. ஆனால் தலைமை அறிவித்த மகளிர் அணி இணை அமைப்பாளர்கள் பட்டியலில் இருந்து 7 பேரை நீக்கி மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் தனக்கு ஆதரவான 7 பேர்களை சேர்த்து தன்னிச்சையாக பட்டியலை வெளியிட்டதாகவும், தான் அறிவித்த பட்டியலில் உள்ளவர்களின் புகைப்படங்களுடன் மகளிர் அணி அமைப்பாளர் நகரின் பல்வேறு பகுதிகளில் சுவரொட்டிகள் மற்றும் பேனர்கள் அமைத்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Advertisement

இதுகுறித்து மாவட்ட மகளிர் அணி இணை அமைப்பாளர்கள் சசிகலா, ஜான்சி ராணி ஆகியோர் கூறும்போது, கடந்த 20 வருடமாக விஜய் ரசிகையாக இருந்து வருகிறோம். கடந்த 3ம் தேதி மாவட்ட மகளிர் அணி பதவிகள் அறிவிக்கப்பட்டன. தலைமை அறிவித்த பட்டியலில் இருந்து 7 பேரை நீக்கி புதிதாக 7 பேரை போலியாக நியமித்து ஆள் மாறாட்டம் செய்கின்றனர். மாவட்ட செயலாளரிடம் கேட்டபோது பணம் கொடுத்தால் தான் இந்த பொறுப்பில் இருக்க முடியும். பணம் கொடுக்க முடியவில்லை என்றால் பொறுப்பை விட்டு போய் விடுங்கள் என்று கூறுகிறார். பணம் கொடுத்து தான் இந்த கட்சியில் செயல்படணுமா? விஜய்க்காக உழைக்கணும் என்று தான் இந்த கட்சிக்கு வந்தோம். விஜய் மூலம் நியாயம் கிடைக்கும் என்று நம்புகிறோம். எனவே மாவட்ட செயலாளர் மற்றும் மாவட்ட மகளிர் அணி செயலாளர் மீது தலைமை உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றனர்.

Advertisement