மோடி கடவுள் தூதரா என விரைவில் தெரியும்; ஜூன் 4ல் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும்: லாலு பிரசாத் யாதவ் உறுதி
Advertisement
இந்நிலையில் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் தன் டிவிட்டர் பதிவில், “இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கரை இழிவுப்படுத்தும் பாஜ தலைவர்கள் இடஒதுக்கீட்டை ஒழிப்பது பற்றி பேசுகிறார்கள்.
அம்பேத்கர் அரசியலமைப்பை எழுதியதால்தான் மோடியும், பாஜவினரும் அரசியலமைப்பை வெறுக்கிறார்கள்” என்று பதிவிட்டுள்ளார். மேலும் பாட்னாவில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த லாலு பிரசாத் யாதவ், “பிரதமர் மோடி தான் கடவுளின் தூதர் என்று தன்னை சொல்லி கொள்கிறார். அவர் கடவுளின் தூதரா என்பது விரைவில் தெரிந்து விடும். ஜூன் 4ம் தேதி இந்தியா கூட்டணி நிச்சயம் ஆட்சி அமைக்கும்” என்று தெரிவித்தார்.
Advertisement