தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தேர்தலுக்குள் ஒரு டஜன் முறை மோடி தமிழ்நாட்டுக்கு வருவார்: கார்த்தி சிதம்பரம் ‘கலாய்’

சிவகங்கை: சிவகங்கை, மானாமதுரை சட்டப்பேரவை தொகுதிகளுக்கான பாக முகவர்கள் கூட்டம் நேற்று சிவகங்கையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற எம்பி கார்த்தி சிதம்பரம், செய்தியாளர்களிடம் கூறியதாவது: எஸ்ஐஆர் திருத்தம் மூலம் தகுதியான வாக்காளர்களை சேர்ப்பதற்கு உதவி செய்ய வேண்டும். யாரையும் நியாயமில்லாமல் நீக்க கூடாது. தேர்தல் ஆணையம் பல இடங்களில் ஒருதலைபட்சமாக செயல்பட்டதால் அதன் நடத்தை மீது சந்தேகம் எழுகிறது. பிரதமர் மோடி கோவை விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்க வந்துள்ளார். வரும் தேர்தலுக்குள் இதேபோல் குறைந்தபட்சம் தமிழகத்துக்கு ஒரு டஜன் தடவையாவது வருவார். அவர் அனைத்து அறிவிப்புகளையும் செய்த பிறகே தமிழகத்தில் தேர்தலை அறிவிப்பார்கள். மோடி அறிவித்த திட்டங்கள் எல்லாம் அமல்படுத்தப்பட்டிருக்கிறதா என்பதையும் பார்க்க வேண்டும். வரும் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் மாற்றம் இருக்காது. செல்வப்பெருந்தகை தலைமையில்தான் வரும் சட்டப்பேரவை தேர்தலை சந்திக்கும். ஆட்சியில் பங்கு என்பதை தற்போது பேச வேண்டிய அவசியம் இல்லை. இன்றைய சூழ்நிலையில் யார், யாருடன் கூட்டணி சேர்ந்தாலும், பலமுனை போட்டியில் இந்தியா கூட்டணிதான் வெற்றி பெறும். இவ்வாறு கூறினார்.

Advertisement

Advertisement

Related News