இஸ்ரேல் பிரதமரை பாராட்டிய மோடிக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: காசா பகுதியில் நடந்து வரும் மனிதாபிமானமற்ற பேரழிவும், பாலஸ்தீன மக்கள் மீது நிகழ்த்தப்படும் இனப்படுகொலையும் உலகம் முழுவதும் கண்டனத்திற்கு உள்ளாகி வரும் நிலையில், இந்திய பிரதமர் மோடி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை தொலைபேசியில் பாராட்டியிருப்பது கடும் அதிர்ச்சியளிக்கிறது. பாலஸ்தீன மக்களின் இறையாண்மையைஇந்தியா 1988ம் ஆண்டு முதலே அங்கீகரித்துள்ளது. அதை புறக்கணித்து, இனப்படுகொலை செய்த ஆட்சியாளரைப் புகழ்வது, அகிம்சையைப் போதித்த இந்தியாவிற்கு கடுமையான அவப்பெயரை உண்டாக்கும். இது கடும் கண்டனத்துக்குரியது. இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement