தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மோடி அடிக்கடி வருவது ஏன்? நிர்மலா ‘ஓவர் பில்டப்’

கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜ வேட்பாளர் நரசிம்மன், சிதம்பரம் பாஜ வேட்பாளர் கார்த்தியாயினி, தஞ்சை பாஜ வேட்பாளர் கருப்பு முருகானந்தம் ஆகியோரை ஆதரித்து ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒசூர், சிதம்பரத்தில் பிரசாரம் செய்தார். தஞ்சையில் ரோடு ஷோவும் நடத்தப்பட்டது அப்போது அவர் பேசியதாவது: ஒன்றியத்தில் ஆட்சியில் இருக்க கூடிய பாஜ எத்தனையோ எதிர்க்கட்சிகள் ஆட்சியில் இருக்கக் கூடிய மாநிலங்களுக்கு எல்லாம், பல்வேறு திட்டங்களை தந்துள்ளது. பிரதம மந்திரி முத்ரா யோஜனா திட்டம் மூலம் ஏழை, எளியவர்கள் சிறிய தொழில் தொடங்க வங்கிகளில் எந்த உத்தரவாதமும் இல்லாமல், குறைந்த வட்டியில் கடன் பெறும் திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் ரூ.27 லட்சம் கோடி, மக்களை சென்றடைந்துள்ளது. முதியவர்களுக்கான பென்ஷன் திட்டம், வீடுகள் தோறும் குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டம், ஏழைகளுக்கு வீடு கட்டி கொடுக்கும் திட்டம், விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6000 வழங்கும் திட்டம், ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீட்டு திட்டம் என எண்ணற்ற திட்டங்களை தந்துள்ளோம். தொழில் வளர்ச்சிக்காக, தமிழகத்திற்கு அடிக்கடி வந்தவர் பிரதமர் மோடி. மேலும் எத்தனையோ முதலீடுகளை தமிழ்நாட்டிற்கு எடுத்து வந்துள்ளார். தொழில்நுட்பம் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
Advertisement

Advertisement