தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இனக்கலவரம் வெடித்து 29 மாதங்களுக்கு பிறகு மோடியின் 3 மணிநேர பயணம் மணிப்பூர் மக்களுக்கு அவமானம்: காங்கிரஸ் சாடல்

புதுடெல்லி: மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 2023 மே 3ம் தேதி மெய்டீஸ், குக்கி, நாகா மக்களிடையே இனமோதல் வெடித்தது. இதில், 260க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அங்கு தற்போது நிலைமை கட்டுக்குள் இருந்தாலும், அவ்வப்போது வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. மேலும், என்.பிரேன் சிங் தலைமையிலான அரசு ராஜினாமா செய்ததால், குடியரசு தலைவர் ஆட்சிஅமல்படுத்தப்பட்டது. இந்த வன்முறைக்கு பிறகு பிரதமர் மோடி ஒரு முறை கூட மணிப்பூர் செல்லாமல் இருப்பது குறித்து காங்கிரஸ் பலமுறை கேள்வி எழுப்பி, விமர்சித்துள்ளது. தற்போது மணிப்பூரில் இனக்கலவரம் வெடித்து இரண்டரை ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் மோடி வரும் 13ம் தேதி மணிப்பூர் செல்ல உள்ளதாக தகவல்கள் வௌியாகி உள்ளன.

Advertisement

மிசோரம் மாநிலத்தில் ரயில்வே உள்கட்டமைப்பு திட்டங்களை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி, அதனை தொடர்ந்து மணிப்பூர் செல்ல இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் வருகை தொடர்பாக மணிப்பூர் ஆளுநர் அஜய் குமார் பல்லா நேற்று தலைமை செயலாளர் புனித் குமார் கோயல், பாதுகாப்பு ஆலோசகர் குல்தீப் சிங் மற்றும் காவல்துறை இயக்குநர் ஜெனரல் ராஜீவ் சிங், உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் முதல்வர் என்.பிரேன் சிங் உள்பட பாஜ தலைவர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் காங்கிரஸ் பொதுசெயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தன் எக்ஸ் பதிவில், “செப்டம்பர் 13ம் தேதி பிரதமரின் உத்தேச மணிப்பூர் பயணம் பற்றி அவரது ஆதரவாளர்கள் பாராட்டுகின்றனர். ஆனால் இந்த பயணத்தின்போது வெறும் 3 மணி நேரம் மட்டுமே அங்கு செலவிடுவார் என தெரிகிறது. இந்த அவசர பயணத்தால் மோடி என்ன சாதிக்க விரும்புகிறார்? இது பிரதமர் மோடியின் வருகைக்காக 29 மாதங்களாக காத்திருக்கும் மக்களுக்கு பெரும் அவமானம். இது மணிப்பூர் மக்கள் மீது மோடிக்கு இருக்கும் அக்கறையின்மையை மீண்டும் வௌிப்படுத்துகிறது” என்றார்.

Advertisement

Related News