தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மோடி அரசின் தவறான பொருளாதார கொள்கை ஒரு சிலரிடம் மட்டும் சொத்து குவிவதால் ஜனநாயகத்துக்கே ஆபத்து: காங்கிரஸ் தாக்கு

புதுடெல்லி: காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: இந்தியா இப்போது கோடீஸ்வரர்களின் புதிய மையமாக மாறி வருகிறது. நாட்டில் பணக்காரர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் வேகமாக அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு அறிக்கையும் இந்தியாவில் சொத்து குவிப்பு குறித்து எச்சரிக்கிறது. கோடிக்கணக்கான இந்தியர்கள் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய போராடும் அதே வேளையில் 1,687 பேர் மட்டுமே நாட்டின் செல்வத்தில் பாதியை கொண்டுள்ளனர்.

Advertisement

மோடி அரசின் பொருளாதார கொள்கைகளால் உருவாக்கப்படும் இந்த மிகப்பெரிய சொத்து குவிப்பு, நாட்டில் மிகப்பெரிய பொருளாதார சமத்துவமின்மையை ஏற்படுத்துகிறது. இந்த சமத்துவமின்மை பரவலான சமூக பாதுகாப்பின்மை மற்றும் அதிருப்தியை உருவாக்குகிறது. பிரதமர் மோடியின் தவறான கொள்கைகளால் அவரது சில தொழிலதிபர் நண்பர்கள் மட்டுமே நன்மை அடைகின்றனர்.

இது ஜனநாயகத்தின் ஆன்மாவின் மீதான நேரடி தாக்குதலும் கூட. பொருளாதார அதிகாரம் சிலர் கைகளில் குவியும் போது, அரசியல் முடிவுகளும் அவர்களுக்கு சாதகமாக எடுக்கப்படுகின்றன. இதன் விளைவாக கோடிக்கணக்கான மக்கள் படிப்படியாக ஜனநாயகம் மற்றும் வளர்ச்சி செயல்முறையிலிருந்து விலக்கப்படுகின்றனர். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Advertisement