தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மோடி பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற சி.வி.சண்முகம்: அதிமுகவில் சலசலப்பு

திண்டிவனம்: திண்டிவனத்தில் பாஜ நடத்திய நிகழ்ச்சியில் சி.வி.சண்முகம் எம்பி, பிரதமர் மோடியின் புகழ்பாடி இருப்பது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் தேஜ கூட்டணியில் அதிமுக, பாஜ அங்கம் வகித்தாலும் யார் முதல்வர் வேட்பாளர் என்ற குழப்பம் நீடித்து வருகிறது. இதில் 2 கட்சிகளும் மாறுபட்ட கருத்துக்களை மாறி மாறி தெரிவித்து வருகின்றன. ஏற்கனவே பாஜவால் தோற்றோம் என வசைபாடிய சி.வி.சண்முகம், ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆரை மோடியை தூக்கி பிடித்து ஜிங் ஜக் அடித்தார். இந்த சூழலில் தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், சி.வி.சண்முகத்தை கடந்த சில நாட்களுக்கு முன் சந்தித்தார்.

Advertisement

இந்நிலையில், திண்டிவனம் அதிமுக முன்னாள் நிர்வாகியும், தற்போது பாஜ மாநில செயலாளராக உள்ளவருமான முரளி ரகுராமன் ஏற்பாட்டில் பிரதமர் மோடியின் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திண்டிவனம் அடுத்த ஓமந்தூரில் தனியார் அறக்கட்டளை சார்பில் 1,008 பசுக்களை கொண்டு கோ பூஜை மற்றும் 75 ஏழைகளுக்கு இலவச பசு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் அதிமுக எம்பி சி.வி.சண்முகம் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘தமிழக மக்கள் சார்பாக இந்தியாவை வல்லரசு நாடாக உருவாக்க நலமோடு வாழ அதிமுக சார்பிலும் மோடியை வாழ்த்துகிறோம். வரி சலுகைகளை மிகப்பெரிய தீபாவளி பரிசாக மக்களுக்கு பிரதமர் கொடுத்துள்ளார்’ என்றார். திண்டிவனத்தில் தனது கீழ் பணிபுரிய மறுத்து அதிமுகவில் இருந்து வெளியேறி பாஜவில் இணைந்த முரளி ரகுராமன் நடத்திய விழாவில் சி.வி.சண்முகம் பங்கேற்றது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Related News