தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பரமாத்மாவால் அனுப்பப்பட்ட மோடி, அதானி மற்றும் அம்பானி கேட்பதை 2 நிமிடங்களில் நிறைவேற்றுகிறார்: ராகுல் காந்தி கடும் விமர்சனம்

Advertisement

டெல்லி: கொரோனாவால் மக்கள் பாதிக்கப்பட்ட போது செல்போனில் டார்ச் அடிக்க சொன்ன மோடியையா கடவுள் அனுப்பி வைத்தார் என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி; காங்கிரஸ் வாக்காளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து பேசினார். அப்போது; ரயில்வே, துறைமுகம், விமான நிலையங்கள், என நாட்டின் அனைத்து சொத்துக்களையும் அதானிக்கு கொடுக்கிறார்கள். அதே சமயம், ஒரு ஏழைக் கடன் தள்ளுபடி, சாலை, மருத்துவமனை, கல்வி, எதுவாக இருந்தாலும், நரேந்திர மோடிக்கு கவலையில்லை.

கோடீஸ்வரர்களின் பாக்கெட்டில் பணத்தை போட்ட நரேந்திர மோடி, அந்த பணத்தில் அமெரிக்கா, துபாயில் நிலம் வாங்கி வியாபாரம் செய்தார்கள். இந்த நாட்களில் பிரதமர் சொல்லும் விஷயங்களை யாரேனும் ஒரு சாமானியர் கூறினால், நீங்கள் அவரை நேராக மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்வீர்கள். பிரதமர் மோடி தன்னை மனித பிறவி அல்ல என்றும், கடவுளால் அனுப்பி வைக்கப்பட்டவர் என்றும் பேட்டியளித்ததை ராகுல் காந்தி சுட்டிக் காட்டினார்.

கொரோனா காலத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துகொண்டிருந்த போது செல்போனில் டார்ச் லைட்டை ஒளிரவிட சொன்ன மோடியையா கடவுள் அனுப்பி வைத்தார் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். கடவுளால் அனுப்பி வைக்கப்பட்டதாக கூறி கொள்ளும் மோடி மக்கள் கோரிக்கைகள் எதையும் நிறைவேற்றாமல் அதானி மற்றும் அம்பானியின் விருப்பங்களுக்காக மட்டுமே செயல்படுகிறார். இந்தியா கூட்டணி அரசாங்கத்தை அமைத்தவுடன் அரசியலமைப்பு பிரமாணத்தை அவமதிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

Advertisement

Related News