மோடியின் 3வது ஆட்சிக்காலத்தில் வினாத்தாள் கசிவு, தீவிரவாத தாக்குதல், ரயில் விபத்துகள் அதிகரிப்பு: மாநிலங்களவையில் கார்கே விளாசல்
Advertisement
இது தொடர்ந்தால் மாணவர்கள் படிப்பதை நிறுத்திவிடுவார்கள். கடந்த 7 ஆண்டுகளில் 70 முறை காகித கசிவு நிகழ்ந்துள்ளது.குடியரசு தலைவரின் உரையானது நாடு எதிர்கொண்டுள்ள சவால்களை புறக்கணித்துள்ளது. அரசின் தோல்வியை மறைக்க முயற்சித்துள்ளது” என்றார். கார்கே பேசும்போது, பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தின்போது கூறிய கருத்துக்களை குறிப்பிட்டார். மேலும் சிறுபான்மையினரையும், பாகிஸ்தானையும் பிரதமர் எத்தனை முறை குறிப்பிட்டார் என்பதை காட்டும் புள்ளிவிவரங்களை தெரிவித்தார். மேலும் ஆர்எஸ்எஸ் அமைப்பு மீதும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். ஆனால் கார்கேவின் பெரும்பாலான கருத்துக்களை அவை தலைவர் ஜகதீப் தன்கார் குறிப்பில் இருந்து நீக்கினார்.
Advertisement