75 வயது பூர்த்தியாவதையடுத்து பதவி விலக போர்க்கொடி மோடி-ஆர்எஸ்எஸ் தலைவர் மோதல்: ‘ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்’ என மறைமுகமாக விமர்சித்த ஜெய்ராம் ரமேஷ்
இந்த விமர்சனத்தைத் தொடர்ந்து, தற்போது மீண்டும் பிரதமர் மோடியை ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார். சமீபத்தில் நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், ‘75 வயதை எட்டியதும், பொறுப்புகளில் இருந்து விலகி அடுத்த தலைமுறைக்கு வழிவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார். ‘இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பிரதமர் மோடி 75 வயதை எட்டவிருக்கும் நிலையில், மோகன் பகவத்தின் இந்த கருத்து மோடிக்கான மறைமுக செய்தி’ என்று ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். ேமலும் அவர் வெளியிட்ட பதிவில், ‘பல விருதுகளை பெற்ற பிரதமர் மோடி பாவம்; அவர் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பியதும், அவருக்கு செப்டம்பர் 17ல் 75 வயதாகிறது என்பதை ஆர்.எஸ்.எஸ் தலைவர் நினைவூட்டியுள்ளார். ஆனால், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்திற்கும் செப்டம்பர் 11ல் 75 வயதாகிறது என்பதை பிரதமர் மோடி அவருக்கு நினைவூட்டலாம். ஒரே கல்லில், இரண்டு மாங்காய்’ என்று ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டுள்ளார். 75 வயது பூர்த்தியாவதையடுத்து பதவி விலக போர்க்கொடி தூக்கியுள்ளதால், மோடிக்கும், ஆர்எஸ்எஸ் தலைவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது என்றும் ‘ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்’ எனவும் மறைமுகமாக காங்கிரஸ் மூத்த ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள இந்த கருத்து, அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.