தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உணவின் தரத்தை பரிசோதனை செய்ய நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனம்

*கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

Advertisement

திருவண்ணாமலை : திருக்கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு உணவு பகுப்பாய்வு வாகனங்கள் கிண்டி, கோவை மற்றும் சேலம் உணவு பகுப்பாய்வு கூடங்களில் இருந்து திருவண்ணாமலை மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.கிரிவலப் பாதை மற்றும் கோயிலை சுற்றியுள்ள திருவண்ணாமலை மாநகராட்சி மற்றும் வட்டார பகுதிகளில் உள்ள உணவகங்கள், தள்ளுவண்டி கடைகள், பேக்கரிகள் மற்றும் அன்னதானம் வழங்கும் இடங்களில் உணவுப் பொருட்களை உடனடி ஆய்விற்கு எடுத்து அதன் தரத்தை பரிசோதனை செய்யும் பணியில் இந்த நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனங்கள் ஈடுபடுத்தப்படுகிறது.

ஆய்வின் போது, தரம் குறைவான உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, உணவு பாதுகாப்பு சட்ட விதிகளின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்நிலையில், உணவு பகுப்பாய்வு வாகனங்களை கலெக்டர் அலுவலகத்தில் இருந்து நேற்று கலெக்டர் தர்ப்பகராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த வாகனங்கள் டிசம்பர் 7ஆம் தேதி வரை திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆய்வுப் பணியில் ஈடுபடுத்தப்படும். நிகழ்ச்சியில், மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் பானு சுஜாதா உள்பட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News