தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

எம்எல்ஏக்கள் விடுதியில் அத்துமீறல் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு: சென்னையில் பெரும் பரபரப்பு

சென்னை: தமிழ்நாடு அமைச்சர் ஐ.பெரியசாமி தொடர்புடைய இடங்களில் நேற்று காலை 7 மணி முதல் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, சேப்பாக்கத்தில் உள்ள எம்எல்ஏக்கள் தங்கும் அரசு விடுதிக்கும் அமலாக்கத்துறை அதிகாரிகள் குழு ஒன்று சோதனை நடத்தச் சென்றது. அப்போது, விடுதி வளாகத்திற்குள் நுழைவதற்கும், அங்குள்ள அறைகளை சோதனையிடுவதற்கும் சட்டமன்ற செயலகத்திடம் உரிய முன்அனுமதி பெறவில்லை என்று கூறப்படுகிறது. தடையை மீறி அதிகாரிகள் விடுதிக்குள் நுழைந்ததாகக் குற்றம்சாட்டப்படுகிறது.

இது சட்டமன்றத்தின் சிறப்புரிமைகளை மீறிய செயல் எனக் கூறி, சட்டமன்ற செயலாளர் சார்பில் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் உடனடியாக புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரை ஏற்றுக்கொண்ட திருவல்லிக்கேணி காவல்துறையினர், இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் அத்துமீறி நுழைதல் மற்றும் அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் 4 அமலாக்கத்துறை அதிகாரிகள், 2 ஒன்றிய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎப் ) வீரர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒருபுறம் அமைச்சர் மீதான அமலாக்கத்துறையின் விசாரணை நடைபெற்று வரும் அதே வேளையில், மறுபுறம் விசாரணை நடத்தச் சென்ற அதிகாரிகள் மீது மாநில காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related News