ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளர்கள் மோதல்: பாமக எம்.எல்.ஏ. அருள் கார் மீது தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு
சேலம்: பாமக ராமதாஸின் ஆதரவாளராக செயல்பட்டு வரும் எம்.எல்.ஏ. அருள் கார் மீது அன்புமணி தரப்பினர் தாக்குதல் நடத்தினர். வாழப்பாடி அருகே பாமக எம்.எல்.ஏ. அருள் சென்ற கார் மீது அன்புமணி தரப்பு நிர்வாகிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். வடுகநத்தம்பட்டியில் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு திரும்பும் வழியில் காரை மறித்து தாக்குதல் நடத்தியுள்ளனர். அன்புமணி ஆதரவு மாவட்டச் செயலாளர் ஜெயபிரகாஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் அருள் எம்.எல்.ஏ. கார் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அருள் எம்.எல்.ஏ. மற்றும் உடன் சென்ற காரையும் வழிமறித்து சரமாரியாக தாக்கியதில் கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. கற்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் கொண்டு தாக்கியதில் அருளுடன் சென்றவர்கள் காயம் ஏற்பட்டுள்ளது. வாழப்பாடி டி.எஸ்.பி. சுரேஷ்குமார் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே இது குறித்து பேசிய அருள் எம்.எல்.ஏ. தன்னை கொலை செய்ய முயற்சி நடந்ததாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.