தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

எம்எல்ஏவாக பதவியேற்ற அடுத்த நாளே கனத்த இதயத்துடன் ராஜினாமா செய்கிறேன்: சிக்கிம் முதல்வரின் மனைவி பரபரப்பு பேட்டி

Advertisement

காங்டாக்: எம்எல்ஏவாக பதவியேற்ற அடுத்த நாளே சிக்கிம் முதல்வரின் மனைவி தனது எம்எல்ஏ பதவியை திடீரென ராஜினாமா செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மக்களவை தேர்தலுடன் சிக்கிம் மாநில சட்டசபை தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. சிக்கிம் மாநிலத்தின் சிக்கிம் கிராந்திக்காரி மோர்ச்சா அமோக வெற்றிப் பெற்றதால், மீண்டும் முதல்வராக பிரேம்சிங் தமாங் பதவியேற்றார். இவருடைய மனைவி கிருஷ்ணகுமாரி ராய், நாம்ச்சி சிங்கிதாங் தொகுதியில் போட்டியிட்டு, சிக்கிம் ஜனநாயக முன்னணி வேட்பாளர் பிமல் ராயை தோற்கடித்து வென்றார். தொடர்ந்து கடந்த புதன் கிழமை புதிய எம்எல்ஏவாக பதவியேற்றார். இந்நிலையில், பதவியேற்ற அடுத்த நாளே (நேற்று) தனது பதவியை ராஜினாமா செய்வதாக கிருஷ்ணகுமாரி ராய் அறிவித்தார். அவருடைய ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் எம்.என் ஷெர்பா ஏற்றுக்கொண்டதாக சட்டசபை செயலாளர் லலித் குமார் குருங் உறுதி செய்திருக்கிறார்.

இதற்கிடையே அருணாச்சலப் பிரதேசத்தின் முதல்வராக பெமா காண்டு பதவியேற்கும் விழாவுக்கு சென்ற சிக்கிம் முதல்வர் பிரேம்சிங் தமாங், அங்கு உரையாற்றினார். அப்போது, அவரது மனைவியின் ராஜினாமா குறித்து கூறுகையில், `கட்சியின் நலன், நல்ல நோக்கங்களுக்காக என் மனைவி தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் என்பதை சிக்கிம் மக்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். எங்களது கட்சியின் நாடாளுமன்றக் குழுவின் வேண்டுகோளின்படி, அவர் எங்கள் கட்சியின் நலனுக்காக தேர்தலில் போட்டியிட்டார். விரைவில் புதிய வேட்பாளரை தேர்ந்தெடுத்து தொகுதி பயனடைவதை உறுதிசெய்வோம்’ என்றார்.

முன்னதாக கிருஷ்ண குமாரி ராய் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘மிகவும் கனத்த இதயத்துடன், நாம்சி-சிங்கிதாங் தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்கிறேன். அரசியலை சமூக நடவடிக்கையாகவே பார்க்கிறேன்.

கட்சியின் வேண்டுகோளை ஏற்று தேர்தலில் போட்டியிட்டேன். தற்போது கட்சியின் முடிவை ஏற்று ராஜினாமா செய்கிறேன். மக்களுக்காக தொடர்ந்து சேவை செய்வேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். முதல்வரின் மனைவி தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதற்கான உண்மையான காரணம் வெளியாகாத நிலையில், கணவனும் மனைவியும் கட்சியை காரணம் காட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement