தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வரும் 13ல் மிசோரம் பயணத்தில் பிரதமர் மோடி முதல்முறை மணிப்பூர் செல்ல வாய்ப்பு

அய்ஸ்வால்: மிசோரமில் கட்டப்பட்டுள்ள புதிய பைராபி-சாய்ராங் ரயில் பாதையை திறந்து வைக்க வரும் 13ம் தேதி மிசோரம் செல்லும் பிரதமர் மோடி அங்கிருந்து முதல் முறையாக மணிப்பூர் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Advertisement

வடகிழக்கு மாநிலமான மிசோரமில் ரூ.8 ஆயிரம் கோடி செலவில் பைராபி முதல் சாய்ராங் வரை 51.38 கிமீ தொலைவுக்கு புதிய ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வரலாற்றில் முதல் முறையாக மிசோரம் தலைநகர் அய்ஸ்வால் நாட்டின் பிற பகுதிகளுடன் ரயில் போக்குவரத்தில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் பாதையை தொடங்கி வைக்க பிரதமர் மோடி வரும் 13ம் தேதி மிசோரம் செல்கிறார். அய்ஸ்வாலில் உள்ள லாம்மாலில் நடைபெறும் தொடக்க விழாவில் அவர் பங்கேற்க உள்ளார்.

மிசோரமைத் தொடர்ந்து அண்டை மாநிலமான மணிப்பூருக்கும் பிரதமர் மோடி செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த 2023 மே மாதம் மணிப்பூரில் மெய்டீஸ் மற்றும் குக்கி சமூகத்தினர் இடையே வன்முறை வெடித்தது. அதில் பலர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். இதுவரையிலும் மணிப்பூரில் அவ்வப்போது வன்முறை வெடித்து வருகிறது. வன்முறைக்கு பிறகு ஒருமுறை கூட பிரதமர் மோடி மணிப்பூருக்கு செல்லாதது குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.

இந்த சூழலில் பிரதமர் மோடி மணிப்பூர் செல்ல இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும், பிரதமரின் வருகைக்கான இறுதி பயணத்திட்டம் தங்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை எனமணிப்பூர் அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

Related News