2025ம் ஆண்டுக்கான உலக அழகி போட்டி தாய்லாந்தை சேர்ந்த சுசாத்தா சுவாங்ஸ்ரீ பட்டம் வென்றார்
Advertisement
இதில் முதல் 8 இடங்களுக்குள் நுழையும் வாய்ப்பை நந்தினி குப்தா தவறவிட்டார். அழகி போட்டியின் இறுதி போட்டி நேற்றிரவு ஹைடைக்ஸ் அரங்கில் நடந்தது. சிறப்பு விருந்தினர்களாக பாலிவுட் நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். இறுதிச் சுற்று போட்டியில், தாய்லாந்தின் ஓபல் சுச்சாத்தா சுவாங்ஸ்ரீ 2025ம் ஆண்டிற்கான உலக அழகியாக வெற்றி பெற்றார்.
இதையடுத்து 2024ம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்ற செக் குடியரசு அழகி கிறிஸ்டினா பிஸ்கோவா, 2025-ம் ஆண்டுக்கான உலக அழகி ஓபல் சுசாத்தாவிற்கு மகுடத்தை சூடினார். சமீபத்தில் தாய்லாந்தில் நடந்த அழகி போட்டியிலும் சுசாத்தா வெற்றி பெற்று மகுடம் சூட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. எத்தியோப்பியாவை சேர்ந்த ஹசேட் டெரேஜே அட்மாசு இரண்டாவது இடத்தையும், போலந்தை சேர்ந்த மாஜா கிளாஜ்டா மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.
Advertisement