தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நீட் குறித்த தவறான தகவல்: 106 டெலிகிராம்,16 இன்ஸ்டாகிராம் சேனல்கள் மீது நடவடிக்கை: தேசிய தேர்வு முகமை கோரிக்கை

Advertisement

புதுடெல்லி: நீட் தேர்வுகள் குறித்த தவறான தகவல்களை தடுப்பதற்காக தேசிய தேர்வு முகமை கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக தவறான தகவல்களை பரப்பும் 106 டெலிகிராம் சேனல்கள், 16இன்ஸ்டாகிராம் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்க சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையத்திற்கு அனுப்பியுள்ளது.

நீட் மருத்துவ நுழைவு தேர்வு வரும் 4ம் தேதி நடைபெறுகிறது. எந்த வித இடையூறு இன்றி தேர்வு நடைபெறுவதற்காக ஒன்றிய கல்வி அமைச்சகம் மாவட்ட கலெக்டர்கள், எஸ்பிக்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு தேர்வில் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட சில முறைகேடுகள் நடந்தன.

அதனால் இந்தாண்டு எந்தவித முறைகேடுகளும் இன்றி தேர்வுகளை நடத்த ஒன்றிய கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில்,சமீபத்தில் தொடங்கப்பட்ட சந்தேகத்திற்கிடமான உரிமைகோரல் அறிக்கையிடல் இணையதளம் மூலம் பெறப்பட்ட உள்ளீடுகளின் அடிப்படையில், தவறான தகவல்களைப் பரப்புவதிலும் மாணவர்களை தவறாக வழிநடத்த முயற்சிப்பதிலும் ஈடுபட்டுள்ள 106 டெலிகிராம் மற்றும் 16 இன்ஸ்டாகிராம் சேனல்களை தேர்வு முகமை அடையாளம் கண்டுள்ளது. அந்த சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி தேசிய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையத்துக்கு தேசிய தேர்வு முகமை கோரிக்கை விடுத்துள்ளது.

 

Advertisement