தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அனைத்து சிறுபான்மையினரையும் வங்கதேச அரசு பாதுகாக்க வேண்டும்: இந்தியா வலியுறுத்தல்

Advertisement

புதுடெல்லி: வங்கதேசத்தில் உள்ள இடைக்கால அரசு அனைத்து சிறுபான்மையினரையும் பாதுகாக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி இருக்கிறது. வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான அட்டூழியங்கள் அதிகரித்துள்ளது. சிறுபான்மையினர் குறிவைத்து தாக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய வெளியுறவு துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், ‘‘இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினருக்கு எதிரான அச்சுறுத்தல்கள், குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து வங்கதேச இடைக்கால அரசிடம் இந்தியா தொடர்ந்து வலுவாக குரல் எழுப்பி வருகின்றது.

இந்த விவகாரத்தில் எங்கள் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. இடைக்கால அரசு அனைத்து சிறுபான்மையினரையும் பாதுகாக்கும் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் தீவிரவாத பேச்சுக்களின் எழுச்சி, அதிகரித்து வரும் வன்முறை மற்றும் ஆத்திரமூட்டல் சம்பவங்கள் குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம். இந்த முன்னேற்றங்களை ஊடகங்கள் மிகைப்படுத்தியதாக கூறி ஒதுக்கிவிட முடியாது. சிறுபான்மையினர் பாதுகாப்பிற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு வங்கதேசத்துக்கு மீண்டும் அழைப்பு விடுக்கிறோம்” என்றார்.

* 17பேரின் வங்கி கணக்குகள் முடக்கம்

வங்கதேசத்தில் தேசத்துரோக குற்றச்சாட்டின் கீழ் இஸ்கான் முன்னாள் உறுப்பினர் சின்மோய் கிருஷ்ணதாஸ் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் கைது செய்யப்பட்ட சின்மோய் உட்பட 17 பேரின் வங்கி கணக்குகளை முடக்குவதற்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வங்கதேசத்தின் நிதி புலனாய்வு பிரிவு நேற்று முன்தினம் இந்த உத்தரவை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ளது. சம்பந்தப்பட்டவர்களின் அனைத்து வகையான பரிவர்த்தனைகளும் ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement