சிறுபான்மையினர் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும்: ஜவாஹிருல்லா வலியுறுத்தல்
2 கன்னியாஸ்திரிகள் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் சூழ்நிலையில் அம்மாநில முதலமைச்சர் இந்த செயலை நியாயப்படுத்தி இருப்பது மதவெறுப்பு அரசியல் அந்த மாநிலத்தில் எந்த அளவிற்கு அதிகமாக இருக்கிறது என்பதை உணர முடிகிறது. கன்னியாஸ்திரிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். அரசியல் ஆதாயத்திற்காகச் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் மற்றும் அத்துமீறல்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.