தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிறுபான்மையினர் வாக்குகளை சூறையாடுவதை தடுக்கவே எஸ்ஐஆர் பணியில் ஈடுபடுகிறோம்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி

சென்னை: திமுகவுக்கு ஆதரவாக உள்ள சிறுபான்மையினர் வாக்குகள் சூறையாடப்படுவதை தடுக்க எஸ்ஐஆர் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.

Advertisement

சென்னை துறைமுகம் சட்டப்பேரவை தொகுதி, வால்டாக்ஸ் சாலையில் உள்ள சென்னை உயர்நிலைப் பள்ளியில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சிஎம்டிஏ சார்பில் ரூ.2.81 கோடியில் கட்டப்படவுள்ள முதல்வர் படைப்பகத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. இதில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும தலைவருமான பி.கே.சேகர்பாபு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

படைப்பாளிகளை உருவாக்கும் நோக்கத்தோடு கொண்டுவரப்பட்ட முதல்வர் படைப்பகம் இதுவரை 3 திறக்கப்பட்டுள்ளது. திமுக 200 தொகுதிகளில் வெல்வோம் என சொன்னதால் எடப்பாடி பழனிசாமி 210 இடங்களில் வெல்வோம் என சொல்கிறார். நாங்கள் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என சொன்னால், எடப்பாடி பழனிசாமி ஒருபடி மேலே போய் 244 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என இல்லாததை சொல்வார். ஏட்டிக்கு போட்டியாக பேசுவது தான் எடப்பாடி பழனிசாமியின் வேலை. அதிக இடங்களில் திமுக வெற்றி பெறும். அரசியல் நாகரிகத்தோடு எடப்பாடி பழனிசாமி பேச வேண்டும். திமுக மீது வெறுப்பின் உச்சத்தில் உள்ளார். கரையான் புற்று போல் அதிமுக கரைந்து கொண்டு செல்கிறது.

திமுகவுக்கு ஆதரவாக உள்ள சிறுபான்மையினர் வாக்குகளை சூறையாடி விடக்கூடாது என்பதற்காக எஸ்ஐஆர் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம். இவ்வாறு கூறினார்.

Advertisement