தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிறுபான்மை மாணவர்கள் வெளிநாடுகளில் கல்வி பயில ரூ.3.60 கோடி ஒதுக்கீடு: முதல்வருக்கு ஜவாஹிருல்லா பாராட்டு

 

Advertisement

சென்னை, செப்.6: சிறுபான்மை மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்வி பயிலும் திட்டத்திற்காக ரூ.3.60 கோடி ஒதுக்கியதற்காக முதல்வருக்கு ஜவாஹிருல்லா பாராட்டு தெரிவித்துள்ளார். மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்ட அறிக்கை: கடந்த ஏப்ரல் மாத பட்ஜெட் கூட்டத் தொடரில், சிறுபான்மை நலத்துறை அமைச்சர், சிறுபான்மையின மாணவ, மாணவியர்கள் வெளிநாடுகளுக்கு சென்று பட்ட மேற்படிப்பு பயில கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என அறிவித்தார். ஆனால் இத்திட்டத்திற்கான அரசாணை இன்று வரை வெளியிடப்படாத காரணத்தால் தமிழ்நாட்டில் பல சிறுபான்மை மாணவ, மாணவிகள் வெளிநாடுகளில் பட்ட மேற்படிப்பை பயில முடியாமல் சிரமப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் இப்பிரச்னை தொடர்பாக கடந்த மாதம் 7ம் தேதி கடிதம் வாயிலாக முதல்வரின் கவனத்திற்கு நான் எடுத்துச் சென்றதின் அடிப்படையில் முஸ்லிம் சிறுபான்மை மாணவ மாணவியர் 10 பேர் வெளிநாடுகளுக்கு சென்று பட்டமேற்படிப்பு பயில கல்வி உதவித்தொகை ரூ.3.60 கோடி ஒதுக்கி அத்திட்டத்திற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மனிதநேய மக்கள் கட்சியின் கோரிக்கையை ஏற்று விரைந்து அரசாணை வெளியிட உதவிய முதல்வருக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Advertisement

Related News