தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மீஞ்சூர் அருகே காஸ் ஏற்றி சென்ற டேங்கர் லாரி சாலையில் கவிழ்ந்ததால் பரபரப்பு

பொன்னேரி: மீஞ்சூர்-வண்டலூர் வெளிவட்ட சாலையில் இன்று காலை டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த காஸ் ஏற்றி சென்ற டேங்கர் லாரி கவிழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மீஞ்சூர் அருகே அத்திப்பட்டு புதுநகரில் இந்தியன் ஆயில் நிறுவன எல்பிஜி காஸ் முனையம் உள்ளது. இங்கிருந்து டேங்கர் லாரியில் காஸ் ஏற்றி கொண்டு, தென்காசியை சேர்ந்த முருகன் என்பவர் இன்று காலை ஆந்திர மாநிலம், கடப்பா பகுதிக்கு புறப்பட்டார்.

Advertisement

இந்த லாரி, மீஞ்சூர்-வண்டலூர் வெளிவட்ட சாலை வளைவில் திரும்பும்போது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி கவிழ்ந்தது. இதில் டிரைவர் முருகன் அதிர்ஷ்டவசமாக சிறுகாயங்களுடன் உயிர் தப்பினார். தகவலறிந்து போக்குவத்து போலீசார் விரைந்து வந்து முருகனை மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், அப்பகுதியில் போக்குவரத்தை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில், அப்பகுதியில் தீ விபத்து ஏற்படுவதை தடுக்கும் வகையில் எண்ணெய் நிறுவன பாதுகாப்பு அதிகாரிகள், தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் பாதுகாப்புக்கு வரவழைக்கப்பட்டன. பின்னர் டேங்கர் லாரியை எண்ணெய் நிறுவன அதிகாரிகள் சோதனை செய்தபோது, டேங்கரில் இருந்து கசிவு எதுவும் ஏற்படவில்லை என உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, டேங்கர் லாரியை பாதுகாப்புடன் மீட்கும் பணிகளில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்துக்குமேல் பரபரப்பு நிலவியது.

Advertisement