தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி தரக்கூடாது என சொல்ல எச்.ராஜாவுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? செல்வப்பெருந்தகை காட்டம்

சென்னை: உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி அளிக்க கூடாது என தீர்மானிக்க எச்.ராஜாவுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என செல்வப்பெருந்தகை காட்டமாக கேள்வி எழுப்பினார். சென்னை, மதுரையை சேர்ந்த தமாகா மற்றும் அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் அக்கட்சிகளில் இருந்து விலகி காங்கிரசில் இணையும் நிகழ்ச்சி சத்தியமூர்த்திபவனில் நேற்று நடந்தது. தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை முன்னிலையில் அவர்கள் காங்கிரசில் இணைந்தனர். இதில் மாநில துணை தலைவர்கள் கோபண்ணா, சொர்ணா சேதுராமன், மாநில பொது செயலாளர்கள் தளபதி பாஸ்கர், எஸ்.ஏ.வாசு மற்றும் மாநில நிர்வாகிகள் அசோகன், கீழானூர் ராஜேந்திரன், வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம் உட்பட பலர் கலந்து கொண்டனர். செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறுகையில், ‘‘உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி அளிக்க கூடாது எனத் தீர்மானிக்க பாஜவை சேர்ந்த எச்.ராஜாவுக்கு என்ன உரிமை இருக்கிறது? திமுக சட்டமன்ற உறுப்பினர்கள்தான் அதனை தீர்மானிக்க முடியும். இதனை கூறுவதற்கு எச்.ராஜா யார், அவருக்கு என்ன அதிகாரம் உள்ளது? என்றார்.
Advertisement

Advertisement

Related News