தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குன்றத்தூரில் 1000 ஆண்டு பழமையான திருநாகேஸ்வர சுவாமி கோயிலில் அன்னதான கூடம், புதிய அலுவலகம்: அமைச்சர்கள் திறந்து வைத்தனர்

 

Advertisement

குன்றத்தூர்: குன்றத்தூரில் 1000 ஆண்டு பழமையான திருநாகேஸ்வர சுவாமி கோயிலில் ரூ.84.65 லட்சம் செலவில் கட்டப் பட்டுள்ள அன்னதான கூடம் மற்றும் புதிய அலுவலகத்தை அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் இன்று திறந்து வைத்தனர்.குன்றத்தூரில் பிரசித்தி பெற்ற திருநாகேஸ்வர சுவாமி கோயில் உள்ளது. 1000 ஆண்டு பழமையான இக்கோயில் கிபி 12ம் நூற்றாண்டில் தெய்வப்புலவர் சேக்கிழார் பெருமானால் கட்டப்பட்டதாகும்.

கும்பகோணம் அருகேயுள்ள திருநாகேஸ்வரத்தில் உள்ள நாகேஸ்வர சுவாமி கோயிலுக்கு சென்று வந்த பிறகுதான், சேக்கிழார் பெருமான் இக்கோயிலை கட்டியதாக கூறப்படுகிறது. நவக்கிரகங்களில் சிறந்த ராகு பரிகார ஸ்தலமாக இக்கோயில் விளங்குகிறது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து, சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலுக்கு புதிதாக அன்னதானக்கூடம் அமைத்துத் தரவேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் பக்தர்கள் நீண்ட நாட்களாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். அதனடிப்படையில், ரூ.68 லட்சம் செலவில் அன்னதானக்கூடம் கட்டவும், புதிய அலுவலகம் கட்டவும் அரசு சார்பில் ரூ.16.65 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பணி நிறைவடைந்த நிலையில், இன்று காலை திறப்பு விழா நடந்தது. இதில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் கலந்துகொண்டு, புதிய கட்டிடங்களை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.

நிகழ்ச்சியில், ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன், குன்றத்தூர் நகராட்சி தலைவர் கோ.சத்தியமூர்த்தி மற்றும் அரசு அதிகாரிகள், ஊர் மக்கள், பக்தர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட னர். விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை செய்திருந்தது.

Advertisement