தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அமைச்சர் பதவியை விட சினிமா தான் முக்கியம் சர்ச்சை பேச்சால் சுரேஷ் கோபியின் பதவி பறிபோகுமா? பாஜ மேலிடம் கடும் அதிருப்தி

திருவனந்தபுரம்: மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான சுரேஷ் கோபி கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜ சார்பில் திருச்சூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கேரளாவில் பாஜவுக்கு கணக்கை தொடங்கி வைத்ததால் சுரேஷ் கோபிக்கு இணையமைச்சர் பதவி வழங்கப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன் கொச்சியில் நடந்த பிலிம் சேம்பர் கூட்டத்தில் சுரேஷ் கோபி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், எனக்கு அமைச்சர் பதவியை விட சினிமா தான் முக்கியமாகும். 22 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளேன்.
Advertisement

அதில் நடிப்பதற்கு அமித்ஷாவிடம் அனுமதி கேட்டு ஒரு கடிதம் கொடுத்தேன். ஆனால் அந்தக் கடிதத்தை அவர் மூலையில் தூக்கி வீசிவிட்டார். படங்களில் நடிக்க இதுவரை எனக்கு அனுமதி கிடைக்கவில்லை. அனுமதி கிடைக்கும் என்று நான் நம்புகிறேன். இல்லாவிட்டாலும் செப்டம்பர் 6ம் தேதி முதல் ஒற்றக்கொம்பன் சினிமா படப்பிடிப்பில் கலந்து கொள்வேன். அதற்காக என்னை அமைச்சர் பதவியை விட்டு நீக்கினால் நல்லது என்று நினைப்பேன். சினிமா இல்லாவிட்டால் நான் செத்து விடுவேன் என்று கூறினார். சுரேஷ் கோபியின் இந்த பேச்சு பாஜ மேலிடத்திற்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக அமித்ஷா குறித்தும் அவர் பேசியது மேலிடத் தலைவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர் பதவியில் இருந்தபடி பணம் பெறும் வேறு தொழிலில் ஈடுபடக்கூடாது. எனவே சினிமாவில் நடிக்கும் முடிவில் சுரேஷ் கோபி உறுதியாக இருந்தால் அவரது அமைச்சர் பதவி பறிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக பாஜ மேடம் தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

Advertisement

Related News