தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வால்டாக்ஸ் சாலையில் குளிரூட்டப்பட்ட புதிய பேருந்து நிலையம்: அமைச்சர் சேகர்பாபு பணிகளை தொடங்கி வைத்தார்

 

Advertisement

சென்னை: வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் , சிஎம்டிஏ சார்பில் வால்டாக்ஸ் சாலையில் கட்டப்பட உள்ள குளிரூட்டப்பட்ட புதிய பேருந்து நிலைய பணிகளை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். துறைமுகம் சட்டமன்ற தொகுதி, வால்டாக்ஸ் சாலையில், வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சிஎம்டிஏ சார்பில் கட்டப்படவுள்ள குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தத்திற்கான பணியினை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று காலை தொடங்கி வைத்தார்.

இதை தொடர்ந்து, வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளான வால்டாக்ஸ் சாலை, ஒத்தவாடை தெருவில் சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சமுதாய நலக்கூடத்தின் கட்டுமான பணிகளையும், வால்டாக்ஸ் சாலை, தண்ணீர் தொட்டி தெருவில் சி.எம்.டி.ஏ. சார்பில் கட்டப்பட்டு வரும் ரத்த சுத்திகரிப்பு நிலையம், 844 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், விளையாட்டுத் திடல், சமூக நலக்கூடம், மாநகராட்சி அச்சகம் என ‘‘ஒருங்கிணைந்த வளாகம்” கட்டுமான பணிகளையும் மற்றும் ஸ்டான்லி அரசு மருத்துவமனை சாலையில் சி.எம்.டி.ஏ. சார்பில் கட்டப்பட்டு வரும் 776 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான பணிகளையும் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் நேரில் ஆய்வு செய்தனர்.

அப்போது, பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களை அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியில், சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் கோ.பிரகாஷ், மாநகராட்சி ஆணையாளர் ஜெ.குமரகுருபரன், மாநகராட்சி வடக்கு வட்டார துணை ஆணையாளர் கட்டா ரவி தேஜா, மண்டலக்குழுத் தலைவர் ஸ்ரீராமுலு, எம்டிசி இணை மேலாண் இயக்குநர் ராகவன், பொது மேலாளர் (இயக்கம்) நெடுஞ்செழியன், தலைமை பொறியாளர் மகாவிஷ்ணு, கண்காணிப்பு பொறியாளர் பாலமுருகன், உள்ளாட்சித் பிரதிநிதிகள் எஸ்.முரளி, அபாரன்ஜி, ரவிச்சந்திரன், மாமன்ற உறுப்பினர்கள் தாஹா நவீன், பரிமளம், மாநகராட்சி மற்றும் சி.எம்.டி.ஏ அலுவலர்கள் உடனிருந்தனர்.

 

Advertisement

Related News