தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அமைச்சர் இலாகா ஒதுக்கீட்டில் இழுபறி; உள்துறை கேட்டு ஏக்நாத் அடம்: மகாராஷ்டிராவில் பரபரப்பு

Advertisement

மும்பை: மகாராஷ்டிரா பேரவை தேர்தல் முடிந்து 12 நாட்களுக்கு பின்னர் முதல்வர் தேர்வு முடிவுக்கு வந்தது. முதல்வராக தேவேந்திர பட்நவிஸ், துணை முதல்வர்களாக ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் ஆகியோர் பதவியேற்றனர். நேற்று எம்எல்ஏக்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நடந்தது. ஆனால் பட்நவிஸ் அமைச்சரவையில் யார் யாருக்கு என்னென்ன இலாகா, யார் யாருக்கு அமைச்சர் பதவி போன்ற விவகாரங்கள் பெரும் இழுபறியில் இருந்து வருகிறது. முதல்வர் பதவியேற்பு விழா முடிந்து மூன்று நாட்களுக்குப் பிறகும், மகாயுதி கூட்டணியில் முக்கிய இலாகாக்கள் குறித்த மோதல் தொடர்கிறது.

துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, உள்துறை அமைச்சர் பதவியே கேட்டு அழுத்தம் கொடுத்து வருவதால் அமைச்சர்களின் இலாகாக்களை முடிவு செய்வதில் தாமதமாகிறது. தேவேந்திர பட்நவிஸ் துணை முதல்வராக இருந்தபோது, அவருக்கு வழங்கப்பட்ட உள்துறை அமைச்சர் பதவியை தனக்கு வழங்க வேண்டும் என்று ஏக்நாத் ஷிண்டே கோரி வருகிறார். பட்நவிஸ் அமைச்சரவையில் 43 பேருக்கு அமைச்சர் பதவி ஒதுக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement