தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில் 12வது வாரிய கூட்டம் உயிரிப்பல்வகைமை திருத்த சட்டத்தில் அதிகாரிகள் நியமித்தல் தொடர்பாக ஆலோசனை

சென்னை: தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு உயிரிப்பல்வகைமை வாரியத்தின் 12வது வாரிய கூட்டம், வனம்,காதித்துறை அமைச்சர் மற்றும் வாரிய தலைவர் ராஜகண்ணப்பன் தலைமையில் நேற்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. சுற்றுசூழல், காலநிலை மற்றம் மற்றும் வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹு முன்னிலை வகித்தார். உயிரிப்பல்வகைமை என்பது நுண்ணுயிரிகள், பூச்சிகள் போன்ற மிகச்சிறிய உயிரினங்கள் முதல் மரங்கள் மற்றும் பாலுாட்டிகள் போன்ற பெரிய உயிரினங்களுக்கிடையே உள்ள பல்வகைமையைக் குறிக்கிறது.

Advertisement

உயிரிப்பல்வகைமை உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்யும் வளங்களை வழங்குவதோடு உள்ளூர் சமூகங்களின் வாழ்வாதார உருவாக்கத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும் மானுடவியல் அழுத்தம், காலநிலை மாற்றம் மற்றும் உயிர்வளங்களை வரையறையின்றி பயன்படுத்துதல் போன்றவற்றால் உயிரிப்பல்வகைமை பல அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறது. தமிழ்நாடு உயிரிப்பல்வகைமை வாரியம், உயிரிப்பல்வகைமை சட்டம் 2002பிரிவு 22ன் கீழ் தமிழ்நாடு அரசால் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை துறையின் மூலம் உருவாக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும், இக்கூட்டத்தில் தமிழ்நாடு உயிரிப்பல்வகைமை விதிகள், புதிய உயிரிப்பல்வகைமை பாரம்பரிய தலங்களை அறிவிக்கை செய்தல் மற்றும் அறிவிக்கை செய்யப்பட்ட தலங்களைப் பாதுகாத்தல், வேளாண் உயிரிப்பல்வகைமை தொடர்பான நடவடிக்கைகள், செஞ்சந்தனம் மர விற்பனை மூலம் பெறப்பட்ட அணுகுதல் மற்றும் பலன்பகிர்வு தொகைகளை பயனாளர்களுக்கு பகிர்வு செய்தல், உயிரிப் பல்வகைமை திருத்த சட்டத்தில் உள்ள அதிகாரிகளை நியமித்தல் மற்றும் தமிழ்நாடு உயிரிப்பல்வகைமை வாரியத்தை மேம்படுத்துதல் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

Advertisement

Related News