தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

அமைச்சர் ஐ.பெரியசாமி தொடர்பான இடங்களில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் ஆய்வு: அமலாக்கத்துறை தகவல்

 

சென்னை: அமலாக்கத்துறை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, அவரது மகன் பழனி தொகுதி எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமார் தொடர்புடைய இடங்களில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ், கடந்த 16ம் தேதி சோதனை நடத்தப்பட்டது. தமிழ்நாடு ஊழல் தடுப்புப் பிரிவு, பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பதிவு செய்யப்பட்ட வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கின் அடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டது. ஐ.பெரியசாமி வருவாய்த்துறை அமைச்சராக இருந்த போது, சுமார் ரூ.2 கோடி அளவுக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் குவித்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறை தாக்கல் செய்த செய்த குற்றப்பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், ஐ.பெரியசாமி, மகன் ஐ.பி.செந்தில்குமார், மகள் இந்திரா ஆகியோர் வீடு மற்றும், ஐ.பெரியசாமி, அவரது இளைய மகள் பிரபு இயக்குநர்களாக இருக்கும் இருளப்பா மில்லில் நடத்தப்பட்ட சோதனையில், சொத்துக்கள், பல்வேறு நிறுவனங்கள் முதலீடு செய்ததற்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.மேலும், இருளப்பா மில் வளாகத்தில் இருந்து சில காகித நிறுவனங்கள் இயக்கப்படுவதையும் கண்டறியப்பட்டு, அந்நிறுவனங்களின் கணக்குகள் சரிபார்க்கப்பட்டு வருகிறது. மேலும், பல டிஜிட்டல் ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டு, அவை கணக்காய்வு செய்யப்பட்டு வருகிறது.