தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அமைச்சர் கோவி.செழியன் தகவல் பி.எட் விண்ணப்ப பதிவு நீட்டிப்பு

சென்னை: நடப்பாண்டு பி.எட். மாணவர் சேர்க்கையில் 7 அரசுக் கல்லூரிகள், 14 அரசு உதவிபெறும் கல்லூரிகள் உள்ளன. இதில் அரசுக் கல்லூரியில் 900 இடங்களும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் 1,140 இடங்களுமாக மொத்தம் 2040 இடங்கள் உள்ளன. இவற்றில் 2025-26ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவை கடந்த மாதம் 20ம் தேதி சென்னை ராணி மேரி கல்லூரியில் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தொடங்கி வைத்தார். www.tngasa.in என்ற இணையதள முகவரியில் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து வந்தனர். ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பின்படி, விண்ணப்பிக்கும் அவகாசம் ஜூலை 9ம் தேதியுடன் (நேற்றுடன்) நிறைவடைந்தது. இந்நிலையில் மாணவர்களின் நலன் கருதி பி.எட் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement

இதுகுறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் வெளியிட்டுள்ள அறிவிப்பு: கடந்த மாதம் 20ம் தேதி முதல் தொடங்கப்பட்ட விண்ணப்ப பதிவு, நேற்றுடன் (ஜூலை 9) முடிவடைந்ததால், மாணாக்கர்கள் நலன் கருதி விண்ணப்பிக்கும் தேதி வரும் 21ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. இதை தொடர்ந்து, 31ம் தேதி அன்று மாணாக்கர் தரவரிசைப்பட்டியல் வெளியிடப்படும். ஆகஸ்ட் 4 முதல் 9ம் தேதிக்குள் மாணாக்கர்கள் தங்கள் விருப்ப கல்லூரியை தேர்வு செய்யலாம். ஆகஸ்ட் 13ம் தேதி அன்று மாணாக்கர்களுக்கான இட ஒதுக்கீட்டு ஆணை வெளியிடப்படும். மாணாக்கர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஆணையை தங்கள் உள்நுழைவு ஐடி மூலம் www.iwiase.ac.in என்ற இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரியில் சேர்ந்து கொள்ளலாம். ஆகஸ்ட் 20 முதல் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பி.எட். முதலாம் ஆண்டு மாணாக்கர்களுக்கு வகுப்புகள் தொடங்கும். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Related News