பழநியில் முத்தமிழ் முருகன் மாநாட்டு பணிகளை அமைச்சர் ஆய்வு
Advertisement
மாநாட்டில், 15 முருகனடியார்களின் பெயரில் விருது வழங்கப்பட உள்ளது. 1300 பேர் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்கப்பட உள்ளனர். இதில், 4 நீதியரசர்கள், 15 ஆதீனங்கள், 30 ஆன்மிக சொற்பொழிவாளர்கள் கலந்து உள்ளனர். மாநாட்டில் விழா மலர் மற்றும் ஆய்வுக் கட்டுரை மலர் என இரண்டு மலர்கள் வெளியிடப்பட உள்ளன.மாநாடு காலை 8.30 மணி முதல் மதியம் 1 வரையும், பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரையும் நடைபெறுகிறது. மாநாட்டிற்காக பழநி நகரில் 8 இடங்களில் அலங்கார வளைவுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. 8 ஆயிரம் பக்தர்கள் அமரும் வகையில் கலையரங்கம் அமைக்கும் பணி உள்ளிட்ட பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இப்பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோர் இன்று காலை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
Advertisement