தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஒன்றிய இணை அமைச்சர் சுரேஷ் கோபியை காணவில்லை: காவல் நிலையத்தில் காங். மாணவர் சங்கம் புகார்

திருவனந்தபுரம்: ஒன்றிய இணை அமைச்சர் சுரேஷ் கோபியை காணவில்லை என்று கூறி காங்கிரஸ் மாணவர் அமைப்பான கேஎஸ்யு குருவாயூர் காவல் நிலையத்தில் அளித்த புகார் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் மாணவர் சங்கமான கேஎஸ்யுவின் திருச்சூர் மாவட்ட தலைவர் கோகுல் நேற்று குருவாயூர் கிழக்கு காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில் கூறியிருந்த விவரங்கள் வருமாறு:

திருச்சூர் நாடாளுமன்றத் தொகுதி எம்பியும், ஒன்றிய இணை அமைச்சருமான சுரேஷ் கோபியை கடந்த சில தினங்களாக காணவில்லை. சட்டீஸ்கரில் கேரள நர்சுகள் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு பின்னர் தான் அவர் மாயமானார். சுரேஷ் கோபி மாயமானதற்கு பின்னணியில் இருப்பவர்கள் யார், அவர் எங்கு இருக்கிறார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும். இவ்வாறு அந்தப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து கேஎஸ்யு தலைவர் கோகுல் கூறியது: ஒரு எம்பி என்றால் மக்களின் பிரச்னைகளை தீர்ப்பதற்காக அடிக்கடி தொகுதிப் பக்கம் வரவேண்டும். ஆனால் சட்டீஸ்கரில் கேரள நர்சுகள் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு பின்னர் கடந்த சில வாரங்களாக சுரேஷ் கோபி தொகுதிக்கு வரவில்லை. அவர் எங்கு இருக்கிறார் என தெரியவில்லை. இதனால் தான் சுரேஷ் கோபி காணாமல் போனதாக கூறி நான் போலீசில் புகார் கொடுத்தேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related News