தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் பச்சை துண்டு அணிந்து வந்தார்: துரைமுருகன் பேச்சால் சிரிப்பலை

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நேற்று வேளாண் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. அப்போது அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பச்சை வண்ணத் துண்டு அணிந்து சட்டப்பேரவைக்கு வந்திருந்தார். விவாதம் தொடங்கியதும், குறுக்கிட்டு எழுந்த அவை முன்னவர் துரைமுருகன், ‘பள்ளிக்கூடங்களில் சுதந்திர தினம் குடியரசு தினம் என்றால் ஆசிரியர்கள் மட்டும் தேசியக்கொடி குத்திக் கொள்வது கிடையாது. பள்ளியில் இருக்கும் அனைத்து மாணவர்களுக்கும் தேசிய கொடியை கொடுத்து சட்டையில் குத்தச் சொல்வார்கள்.
Advertisement

அதுபோல வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தான் மட்டும் பச்சைத் துண்டு அணிந்து வந்தால் போதாது, பேரவையில் இருக்கும் அனைவருக்கும் கொடுக்க வேண்டும்’ என நகைச்சுவையாக கூறினார். தொடர்ந்து அவர் பேசும்போது, ‘இப்போது கூட ஒன்றும் கெட்டுவிடவில்லை. நாளை காலை ஒரு பையில் பச்சை துண்டை போட்டு அனைத்து எம்எல்ஏக்கள் டேபிள்களிலும் வைத்து விடுவதுதான் சிறப்பு’ என்று கூறினார். அவை முன்னவரின் பேச்சால் சட்டப்பேரவையில் சிரிப்பலை எழுந்தது.

Advertisement

Related News