தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காரியாபட்டியில் அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஆய்வு: மகப்பேறு மருத்துவரை நியமிக்க உத்தரவு

Advertisement

காரியாபட்டி: காரியாபட்டி அரசு மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று காலை நேரில் ஆய்வு செய்தார். அப்போது, மகப்பேறு மருத்துவரை நியமிக்க உத்தரவிட்டார்.  விருதுநகர் அருகே கன்னிசேரிபுதூரில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் இன்று கட்டி திறப்பு விழா நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்றிரவு விருதுநகர் வந்தார். ஆர்ஆர் நகரிலுள்ள விடுதியில் தங்கினார். இந்நிலையில், இன்று காலை ஆர்ஆர் நகரில் இருந்து அழகியநல்லூர், மாந்தோப்பு வழியாக சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது காரியாபட்டி அரசு மருத்துவமனையில் வருகை தந்து திடீர் ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும் டாக்டர்களிடம் மருத்துவ சிகிச்சை குறித்தும் கேட்டறிந்தார்.

இங்கு ரூ. 3.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மருத்துவமனை கட்டிடங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். காரியாபட்டி அரசு மருத்துவமனையில் 5 மருத்துவர்கள் பணியில் உள்ளனர். பிரசவத்திற்காக மகப்பேறு மருத்துவர் இல்லாத நிலையில், வேறு மருத்துவமனையில் இருந்து மாற்றுப் பணியில் வாரம் ஒரு முறைதான் வருகின்றனர். எனவே, காரியாபட்டி அரசு மருத்துவமனைக்கு மகப்பேறு மருத்துவர் மற்றும் செவிலியர்கள் நியமனம் செய்ய வேண்டும் என டாக்டர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, சென்னை மக்கள் நல்வாழ்வுத்துறை அலுவலகத்திற்கு உடனடியாக தொடர்பு கொண்ட அமைச்சர், காரியாபட்டி அரசு மருத்துவமனைக்கு மகப்பேறு மருத்துவரை உடனடியாக நியமிக்க உத்தரவிட்டார். இதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்தள்ளனர்.

Advertisement

Related News