வடமாநில தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்குவது குறித்து விரைவில் பரிசீலனை: அமைச்சர் சி.வி.கணேசன்
12:54 PM Apr 28, 2025 IST
Share
Advertisement
சென்னை : வடமாநில தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்குவது குறித்து விரைவில் பரிசீலனை செய்யப்படும் என்று அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்துள்ளார். பேரவையில் எம்எல்ஏ வேல்முருகன் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் சி.வி.கணேசன் இவ்வாறு பதில் அளித்தார். மேலும் தமிழ்நாட்டில் பணியாற்றும் வட மாநில தொழிலாளர்கள் எண்ணிக்கை குறித்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.