தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஓட்டேரி அருள்மிகு அனுமந்தராயர் கோயில் குடமுழுக்கு பெருவிழாவில் பங்கேற்று சிறப்பித்தார் அமைச்சர் சேகர்பாபு..!!

சென்னை: ஓட்டேரி, அருள்மிகு அனுமந்தராயர் திருக்கோயில் குடமுழுக்கு பெருவிழா இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பங்கேற்று சிறப்பித்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று சென்னை, ஓட்டேரி, அருள்மிகு அனுமந்தராயர் திருக்கோயிலில் நடைபெற்ற திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

Advertisement

இந்து சமய அறநிலையத்துறையானது தனது நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்குகள் நடத்துதல், பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குதல், திருக்கோயிலுக்கு சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுத்தல் போன்ற பல்வேறு பணிகளை சீரிய முறையில் மேற்கொண்டு வருகிறது. மேலும், சட்டமன்றத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளையும் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது.

அந்த வகையில், 100 ஆண்டுகள் பழமையான திருக்கோயில்களில் ஒன்றான சென்னை ஓட்டேரி, அருள்மிகு அனுமந்தராயர் திருக்கோயிலுக்கு திருப்பணிகள் மேற்கொள்ள கடந்த 01.03.2024 அன்று பாலாலயம் செய்யப்பட்டது. இத்திருக்கோயில் சாலை மட்டத்திலிருந்து 4 அடி பள்ளத்தில் அமைந்திருந்ததால் ரூ.1.15 கோடி மதிப்பீட்டில் கருங்கல்லினால் புதிய கருவறை மற்றும் முன்மண்டபம் அமைக்கப்பட்டு இன்று குடமுழுக்கு வெகு விமரிசையாக நடத்தப்பட்டது. இவ்விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் மற்றும் ஏராளமான இறையன்பர்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

இந்த அரசு பொறுப்பேற்றபின், இதுவரை 3,672 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. இன்று மட்டும் 49 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிகழ்ச்சியில் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா ராஜன், மண்டல இணை ஆணையர் ஜ.முல்லை, உதவி ஆணையர் க.சிவகுமார், திருக்கோயில் செயல் அலுவலர் நித்யகலா, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News