தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மருதடியில் வேப்ப மரத்தில் காட்டுத்தீப் போல பால் வடிந்த அதிசயம்: அம்மன் அருள் இருப்பதாக விழுந்து வணங்கிய மக்கள்

பாடாலூர்: ஆலத்தூர் தாலுகா மருதடி கிராமத்தில் வேப்ப மரத்தில் பால் வடிவதை பார்வையிட்ட மக்கள் அம்மன் அருள் இருப்பதாக கூறி விழுந்து வணங்கினர். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் மருதடி கிராமத்தில் ஊருக்கு கிழக்கே விஜயகோபாலபுரம் செல்லும் மண் சாலையில் ஒரு மயானம் அமைந்திருக்கிறது. இந்த மயானம் அருகே ஒரு வேப்பமரம் உள்ளது. இந்த மயானம் அருகே விவசாய நிலங்களும் உள்ளன. தினமும் விவசாய நிலத்துக்கு வரும் மக்கள், மயானத்தின் அருகே உள்ள சாலையை பயன்படுத்துவது வழக்கம். அதன்படி இன்று விவசாய நிலத்திற்கு நடந்து சென்ற மக்களுக்கு அதிசயம் காத்திருந்தது.

Advertisement

அதாவது மயானம் அருகே இருந்த வேப்ப மரத்தில் இருந்து திடீரென்று பால் வடிந்து கொண்டிருந்தது. அதாவது வேப்ப மரத்தின் உச்சியில் இருந்து கீழே பால் வடிந்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இந்த செய்தி காட்டு தீப்போல பரவ தொடங்கியது. இதையடுத்து வேப்ப மரம் இருந்த பகுதிக்கு மருதடி கிராமம் மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த மக்கள் படையெடுத்து வந்து பார்வையிட்டனர். எப்படி மரத்தில் இருந்து பால் வடிகிறது என்பதை ஆச்சரியமாக பார்த்தனர். இருப்பினும் எப்படி பால் வடிந்தது என்பதை யாராலும், யூகிக்க முடியவில்லை.

இதனால் வேப்பமரத்தில் அம்மன் அருள் இருப்பதாக நினைத்த கிராம மக்கள், அதில் தெய்வம் இருப்பதாக கூறுவதுடன், விழுந்து வணங்கி செல்கின்றனர். வேப்ப மரத்தில் பால் வடிந்த சம்பவம் மருதடி கிராம மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Advertisement

Related News