தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தேவர் ஜெயந்தி, குருபூஜை விழா; பசும்பொன்னில் பால்குடம், முளைப்பாரி ஊர்வலம்: காவடி, அலகு குத்தி வந்து மரியாதை

 

Advertisement

ராமநாதபுரம்: கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத்தேவரின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழாவை முன்னிட்டு பொதுமக்கள் பால்குடம், முளைப்பாரி, காவடி, ஜோதி, அலகு குத்தி, வேல் எடுத்து வந்து மரியாதை செலுத்தினர். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத்தேவர் நினைவாலயத்தில், 118வது ஜெயந்தி விழா மற்றும் 63வது குருபூஜை விழா நேற்று முன்தினம் யாகசாலை பூஜைகளுடன் துவங்கியது. தொடர்ந்து பல்வேறு சிறப்பு பூஜை, திருவிளக்கு பூஜை, தேவர் ரதம் வீதி மற்றும் லட்ச்சார்ச்சனை நடந்தது. இரண்டாம் நாளான ேநற்று ஆன்மீக சொற்பொழிவு, பஜனை, கூட்டு பிரார்த்தனை, லட்சார்ச்சனை நடந்தது. பல்வேறு பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பால்குடம், முளைப்பாரி எடுத்து வந்தும், இளைஞர்கள் ஜோதி, வேல்குத்தி வந்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மூன்றாம் நாள் இன்று ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவை முன்னிட்டு காலை முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாவட்டங்களில் இருந்தும் வந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று மரியாதை செலுத்தினர். பல்வேறு ஊர்களில் இருந்து அரசு சார்பில் சிறப்பு பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் பொதுமக்கள் சிரமமின்றி வந்து சென்றனர். தென்மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையில் 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement