தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ராணுவ பயிற்சியின் போது குறி தவறிய ஏவுகணை கிராமத்தில் விழுந்தது: ராஜஸ்தானில் பயங்கரம்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் ராணுவ பயிற்சியின் போது குறி தவறிய ஏவுகணை கிராமத்தின் அருகே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மார் மாவட்டம்,போக்ரான் துப்பாக்கிசுடும் பயிற்சி மைதானத்தில் பாதுகாப்பு படையினருக்கான பயிற்சி நேற்றுமுன்தினம் நடந்தது. இந்த பயிற்சியின் போது,ஏவுகணை சோதனை நடந்தது. அப்போது ஏவுகணை குறி தவறியதால் படாரியா என்ற கிராமத்திற்கு 500 மீட்டர் தொலைவில் விழுந்தன.

Advertisement

இந்த ஏவுகணை பயங்கர சத்தத்துடன் கீழே விழுந்தது. இந்த சத்தம் பல கிமீ தூரம் வரை கேட்டது. இதனால் கிராம மக்களிடையே கடும் பீதி ஏற்பட்டது. இதில் எந்த உயிர் சேதமோ அல்லது பொருட் சேதமோ ஏற்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். இது குறித்து பாதுகாப்பு வட்டாரங்கள் கூறுகையில்,பாதுகாப்பு படை பயிற்சியின் போது,ஒரு ஏவுகணை குறி தவறிய நிலையில்,படாரியா கிராமத்தின் அருகே பயங்கர சத்தத்துடன் விழுந்தது.

துப்பாக்கிசுடும் தளத்திற்கு உள்பட்ட பகுதியில் தான் ஏவுகணையின் பாகம் விழுந்துள்ளது. இது வழக்கமான ஒரு பயற்சியாகும் என்று தெரிவித்தன. அதிகாரிகள் கூறுகையில். இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும்,ராணுவம், விமான படை மற்றும் போலீஸ் படையினர் குறிப்பிட்ட கிராம பகுதிக்கு சென்று ஏவுகணையின் பாகங்களை மீட்டு ஒரு வாகனத்தில் எடுத்து சென்றனர்.

Advertisement

Related News