தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் திருத்தணி ராணுவ வீரர் வீர மரணம்

 

Advertisement

சென்னை: திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே சத்திரஞ்ஜெயபுரம் கிராமத்தைச் சேர்ந்த கன்னிவேல் என்பவரின் மகன் சக்திவேல் (30), இந்திய ராணுவத்தில் 2018ம் ஆண்டு பணியில் சேர்ந்து காஷ்மீரில் இந்தியா-பாகிஸ்தான் எல்லை பகுதியில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று காலை 11 மணிக்கு ராணுவ வீரர் சக்திவேல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது தீவிரவாதிகளுடன் கடும் துப்பாக்கி சண்டை நடந்துள்ளது.

இதில், தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்திய ராணுவ வீரர் சக்திவேல் தீவிரவாதிகள் எதிர் தாக்குதலில் சுட்டதில் குண்டடிப்பட்டு வீர மரணம் அடைந்தார் என்று இந்திய ராணுவம் சார்பில் திருத்தணி காவல் நிலையம் மற்றும் வீர மரணம் அடைந்த சக்திவேல் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவரது உடல் காஷ்மீர் ராணுவ முகாமில் இருந்து இன்று அவரது சொந்த ஊரான சத்திரஞ்ஜெயபுரம் கொண்டுவரப்பட்டு குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பின்னர் ராணுவ வீரர்கள் மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் சக்திவேலுக்கு தேவஸ்ரீ (26) மனைவியும், ஆஷிகா செர்லின்(4) மகள் மற்றும் லெனின் அக்ரன் (2) என்ற மகன் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Advertisement